அதிகாலைக்கு முன்பேசந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.
வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.
இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.
உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக