திங்கள், 5 மார்ச், 2012

பிரிவு எனும் மூன்றெழுத்து..!



காதல் என்ற மூன்றெழுத்தின்
மந்திரமே அதில் பின்னியிருக்கும்
அன்பு எனும் மூன்றெழுத்துதான்..!

அதிலே பிரிவு எனும் மூன்றெழுத்து வரின்
தேகம் எனும் மூன்றெழுத்தில்
சோகம் எனும் மூன்றெழுத்து ஏறிவிடும்..!

மனம் எனும் மூன்றெழுத்து
ரணம் எனும் மூன்றெழுத்தில் மூழ்கி
குணம் காணா கூடாகி விடும்..!

பிரிவென்னும் மூன்றெழுத்து இனி எதற்கு...
இணைவு என்ற மூன்றெழுத்தில்
இணை பிரியாமலிருப்போம் தேவி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக