திங்கள், 5 மார்ச், 2012

உதட்டினில் ஒன்று குவித்து..!


தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!
அலைகடல் தாண்டி
அதிர்வலைகளின் வழியே
பயணித்து வரும் 
அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக