ஞாயிறு, 4 மார்ச், 2012

காதல் வேண்டுதல்


கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்
எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.
பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,
கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,
கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,
பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.
இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?
“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக