கவிதை

அன்பு

என் அழுகையின் அர்த்தம் கூட
என் அளவு கடந்த அன்பு தான்......
அதுவும் உனக்காக மட்டும்
அழியாது அலைந்து கொண்டிருக்கும்
அற்புதமான அன்பு.....
நீ இல்லாத ஒரு வாழ்வு
எனக்கு வேண்டவே வேண்டாம்......
என் சோகங்களுக்கு
எப்பொழுதும் முற்றுப்புள்ளியே இல்லையடா.....

 

 

 

காதல்

எல்லோரும் சொல்கிறார்கள்
கண்டதும் காதல்
கண்களில் காதல்
கவிதையில் காதல் என்று
காதலை கண்மூடித்தனமாக
கண்டு சொல்கிறார்கள்......
ஆனால்.....
நிஜமான காதல்
எம் நிழலாக வரும்
நிறுத்திவிட முடியாத
ஒரு நினைவின் காவியம் என்பதை
யாருமே அறிவதில்லை......

 

நீ தான்.... !!!

நான் பார்க்கும் போது ............
நீ தான் என் கண்கள் !!
நான்  பேசும் போது...........
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது .............
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது ............
நீ தான் என் விடியல் !!
வான் எழுதும் போது ..........
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை ...........
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது .............
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது ..........
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது ......
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது ......
நீ தான் என் சுவாசம் !!
நான் இறக்கும் போது .......
நீ தன என் கல்லறை.......!!!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!

 

காதலர் தினம்

கண்களால் பேசி
கனவுகளை சுமந்து
காற்றலையில் உரையாடி
கைகளை கோர்த்து
கவிதைகளைக் கடந்து
கற்பனைகளை  வைத்து
காலம் உள்ளவரை காதலுடனும்
கடைசிவரை கல்லறை வரையும்
என்று  உண்மையாக உரைத்துக்கொண்டிருக்கும்
உயிருள்ள ஜீவன்களுக்கு
இனிய காதலர் தின வாழ்த்துகள்.........

 

உனக்காக .......

நிலவு தேய்ந்தாலும் இரவு அழகு......
 வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
 தூர இருந்தாலும் வானவில் அழகு.....
 கடலோரம் வீசும் காற்று அழகு.......
 கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
 கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
 காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
 இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
 இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
 இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
 என்னுயிரில் கலந்திருக்கும்
 உன்னுயிர் என்றென்றுமே அழகு....

 

தவம்

என் வானவில் போன்ற வாழ்க்கைக்கு
நீ தந்த வரங்கள் வலி
என் கயல் போன்ற கண்களுக்கு
நீ தந்த கவிதைகள் கண்ணீர்........
என் உரிமையான உள்ளத்திற்கு
நீ தந்த உண்மைகள் உன் மௌனம்......
என் முடிவில்லா ஆசைக்கு
நீ வைத்த முற்றுப்புள்ளி பிரிவு ......